Swami Vivekanadar 153 Jayanthi celebration


சுவாமி விவேகானந்தரின் 153 வது ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று பேரணியாக சென்றனர். அருள்மிகு  பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு  கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிகர முத்து தலைமை  தாங்கினார். மாணவர்கள் பேரணியை நகர் மன்ற தலைவர் வேலுமணி துவக்கி வைத்தார். பழனியாண்டவர் கலைக்  கல்லூரி  முதல்வர் அன்புச்செல்வி நாட்டு நலப்பணி  திட்ட அலுவலர்கள் கெளதமன் பழனிசாமி கங்காதரன்  மனோகரன் தேசிய மாணவர் படை அலுவலர் பாக்யராஜ் பேராசிரியர்கள் திருப்பதி ஜோதிஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர் . மேலும் இந்த பேரணியில் சுப்ரமண்யா பொறியியல் கல்லுரி மாரிச்சாமி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் மற்றும்  ஆர் ஆர் ஐ டி ஐ , பாலமுருகன் பாலிடெக்னிக் , சுப்ரமண்யா கலை கல்லுரி பழனியாண்டவர் தொழில் நுட்ப கல்லுரி ஆகிய நிறுவனங்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர் .
      
                     அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் இருந்த சுவாமி விவேகானந்தர் திருவுருவ  சிலைக்கு  நெய்க்காரப்பட்டி அரிமா சங்கம் மயில்சாமி சுப்புராஜ், பழனி அரிமா சங்க தலைவர் ராமோஜி , பெருமாள், மாயகிருஷ்ணன்  பாலதண்டாயுதபாணி பக்தர்கள் பேரவை சேகர்ஜி  , அண்ணாமலையார்  நாயகி ட்ரஸ்ட் ஸ்ரீ குரு ராகவேந்திரா சுவாமி  சேவா ட்ரஸ்ட்   , ஸ்ரீ ரமண மந்திரம்  சோமசுந்தரம் மகாகவி பாரதியார் தமிழ்சங்கம் மணி  ஆகிய அமைப்புகளின் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு புஷ்பாஞ்சலி செய்யப்பட்டது . இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்கள் விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்தனர் .

 வள்ளுவர் தியேட்டர் செந்தில் ஜெயம் கன்ஸ்ட்ரக்சன்  சந்திர சேகர்  ஜே ஆர் சி சின்ராஜ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர் .பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி முன்பு துவங்கிய பேரணி காந்தி மார்க்கட் வழியாக வாசவி மஹாலை சென்றடைந்தது . அங்கு பழனி வாசவி கிளப் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது . பின்பு அனைத்து மாணவர்களுக்கும் பிஸ்கட் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன . 1000 கும் மேற்பட்ட விவேகானந்தரின் சிந்தனை துளிகள் என்ற சிறு புத்தகம் வழங்கப்பட்டன